Menaka Mookandi / 2016 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1201: லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது.
1868: பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஹீலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
1877: செவ்வாய்க் கோளின் ஃபோபோஸ் துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1891: மார்டீனிக் தீவில் நிகழ்ந்த பெரும் சூறாவளியினால் 700 பேர் கொல்லப்பட்டனர்.
1917: கிறீசில் தெசலோனிக்கி என்னும் நகரில் இடம்பெற்ற தீவிபத்தில் நகரின் பெரும் பகுதி அழிந்தது. 70,000பேர் வீடுகளை இழந்தனர்.
1924: பிரான்ஸ் ஜெர்மனியில் இருந்து தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது.
1928: சென்னை மியூசிக் அகாதமி அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.
1938: நியூயோர்க்கையும் கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கும் ஆயிரம் தீவுகள் பாலத்தை அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் திறந்துவைத்தார்.
1950: பெல்ஜியம் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜூலியன் லாஹூட் படுகொலை செய்யப்பட்டார்.
1958: விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
1971: வியட்நாம் போர் - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை திரும்ப அழைக்க முடிவு செய்தன.
1983: டெக்சாசைத் தாக்கிய அலீசியா என்ற சூறாவளியினால் 22பேர் கொல்லப்பட்டனர்.
2005: இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் ஏற்பட்ட மின்சார தடங்கல் காரணமாக சுமார் 10 கோடி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
2008: பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரவ், எதிர்கட்சிகளின் பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக ராஜினாமா செய்தார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026