Menaka Mookandi / 2016 செப்டெம்பர் 12 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1503: மைக்கலாஞ்சலோ புகழ்பெற்ற டேவிட் என்ற சிலையை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார்.
1609: ஹென்றி ஹட்சன், பின்னர் ஹட்சன் ஆறு எனப் பெயரிடப்பட்ட ஆற்றை அடைந்தார்.
1759: கனடாவின் கியூபெக் நகருக்கருகாமையில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சுப் படைகளைத் தோற்கடித்தன.
1788: நியூயோர்க் நகரம் ஐக்கிய அமெரிக்காவின் தற்காலிக தலைநகராக அறிவிக்கப்பட்டது.
1791: பதினாறாம் லூயி மன்னன் பிரான்சின் புதிய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டான்.
1814: பிரித்தானியர் மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரைக் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
1847: மெக்சிக்கோ - அமெரிக்கப் போர் - அமெரிக்கப் படையினர், மெக்சிக்கோ நகரைக் கைப்பற்றினர்.
1898: ஹனிபல் குட்வின் செலுலோயிட் புகைப்படச் சுருளைக் கண்டுபிடித்தார்.
1914: முதலாம் உலகப் போர் - தென்னாபிரிக்கப் படையினர் ஜெர்மனியின் நமீபியா மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
1923: ஸ்பெயினில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் மிகுவேல் பிறிமோ டி ரிவேரா ஆட்சியைக் கைப்பற்றினான்.
1939: கனடா இரண்டாம் உலகப்போரில் குதித்தது.
1940: இரண்டாம் உலகப் போர் - இத்தாலி எகிப்தினுள் நுழைந்தது.
1940: இரண்டாம் உலகப் போர் - ஜெர்மனியின் குண்டுகள் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேதப்படுத்தியது.
1943: சியாங் காய் ஷேக் சீனக் குடியரசின் அதிபரானார்.
1948: இந்தியப் படைகள், ஐதராபாத்தை இந்திய ஆளுமையின் கீழ் கொண்டு வந்தன.
1949: இலங்கை, இத்தாலி, பின்லாந்து, ஐஸ்லாந்து, ஜோர்தான் ஆகிய 6 நாடுகள் ஐ.நா.வில் அங்கத்துவம் பெற சோவியத் ஒன்றியம் தடை செய்தது.
1953: நிக்கிட்டா குருஷேவ் நாட்டின் உயர் பதவியான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார்.
1968: அல்பேனியா வார்சா ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
1971: நியூயோர்க்கில் சிறைக் கைதிகளின் கிளர்ச்சியைக் கட்டுப்படுத்த காவற்துறையினர் எடுத்த நடவடிக்கையில் 42 பேர் கொல்லப்பட்டனர்.
1989: தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான மாபெரும் போராட்டம் டெஸ்மண்ட் டூட்டு தலைமையில் இடம்பெற்றது.
1993: நோர்வேயில் இடம்பெற்ற இரகசியத் தொடர்ப் பேச்சுவார்த்தைகளை அடுத்து பாலஸ்தீனத் தலைவர் யாசர் அரபாத்துக்கும் இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1994: யுலிசெஸ் விண்கலம் சூரியனின் தென் முனையைக் கடந்தது.
1999: மாஸ்கோவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 119 பேர் கொல்லப்பட்டனர்.
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
05 Apr 2026