Editorial / 2021 மே 16 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1920: பிரான்ஸின் வீரமங்கை ஜோன் ஒவ் ஆர்க், பாப்பரசர் 15 ஆம் பெனடிக்டினால் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
1874: அமெரிக்காவின் மில் நதி பெருக்கெடுத்ததால் 139 பேர் பலியாகினர்.
1929: முதலாவது ஒஸ்கார் விருது வழங்கல் விழா அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்றது.

1943: போலந்தின் கெட்டோ பிராந்தியத்தில் ஜேர்மனிய படைகளுக்கு எதிராக யூதர்கள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது.
1960: அமெரிக்க உளவு விமானமொன்று சோவிய யூனியன் வான் பறப்பில் பறந்தமைக்காக அமெரிக்க ஜனாதிபதி ஐசனோவர் மன்னிப்பு கோரவேண்டும் என சோவியத் யூனியன் அதிபர் நிகிட்டா குருசேவ் வலியுறுத்தினார்.
1974: யூகோஸ்லாவியாவில் ஜோசப் டிட்டோ ஆயுட்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
1975: சிக்கிம் பிராந்தியம் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
1975: ஜுன்கோ தாபேய் என்பவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்ணானார்.
1992: எண்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை முடித்து பூமிக்குத் திரும்பியது.
2004: 30களில் கம்யூனிஸ்டுகளினால் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்களை நினைவுகூர உக்ரேனின் தலைநகர் கீவுக்கு அருகில் உள்ள பிக்கீவ்னியாக் காட்டில் பல்லாயிரக்கணக்கானோர் கூடினர்.
2006: தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் கோயில்களில் அர்ச்சகராகத் தகுதி உடையவராக அறிவிக்க மு. கருணாநிதி தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.
2006: நியூசிலாந்திற்கருகில் 7.4 ரிச்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
9 minute ago
38 minute ago
53 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
38 minute ago
53 minute ago
55 minute ago