Janu / 2026 ஏப்ரல் 23 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் போதைப்பொருளை தன்வசம் வைத்திருந்த அரச புலனாய்வுப் பிரிவைச் (State Intelligence Service) சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீகஹவத்த, கல்வெல்ல பாலத்திற்கு அருகில் வைத்து புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
குருந்துவத்தை அரச புலனாய்வு பிரிவில் கடமையாற்றும் 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 98 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மீகஹதென்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago