Editorial / 2021 மே 17 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
1902: கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு, பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.
1915: பிரித்தானியாவின் கடைசி லிபரல் கட்சி ஆட்சி வீழ்ந்தது.
1969: சோவியத்தின் வெனேரா 6 விண்கலம், வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று, அதனுடன் மோத முன்னர், வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
1974: அயர்லாந்தில் டப்ளினில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 33 பேர் கொல்லப்பட்டனர்.
1983: லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு, லெபனான், இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
1990: உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை, தற்பால் சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.
1992: தாய்லாந்து பிரதமர் சுச்சிந்தா பிரப்பிராயூனுக்கு எதிராக நடந்த மூன்று நாள் எதிர்ப்புப் போராட்டங்களில், இராணுவம் சுட்டதில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
1998: தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாண நகர முதல்வர் சரோஜினி யோகேஸ்வரன், சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
2004: அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ ஒருபால் திருமணம், மாசச்சூசெட்ஸ் மாநிலத்தில் நடைபெற்றது.
2006: அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பலான ஒரிசுகானி, மெக்சிகோ வளைகுடாவில் மூழ்கியது.
2006: தமிழ்த் தொலைக்காட்சி நடிகை சிரத்தா விசுவநாதன், தற்கொலை செய்துகொண்டார்.

2007: வட கொரியாவில் இருந்து தென் கொரியா வரையான ரயில் சேவை, 1953ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்றடவையாக இடம்பெற்றது.
2009: நான்காம் கட்ட ஈழப்போர், முடிவுக்கு வந்தது.
58 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
7 hours ago
02 Nov 2025
02 Nov 2025