2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: டிசெம்பர் 15

Menaka Mookandi   / 2013 டிசெம்பர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


1914: ஜப்பானில் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட காஸ் வெடிப்புச் சம்பவத்தால் 687 பேர் பலி.

1967: அமெரிக்காவின் ஒஹியோ மாநிலத்தில் பாலமொன்று உடைந்ததால் 46 பேர் பலி.

1970: தென்கொரிய கப்பல் கொரிய நீரிணையில் கவிழ்ந்ததால் 308 பேர் பலி.

1973: அமெரிக்க உளவியல் மருத்துவர்கள் சங்கம் ஓரினச் சேர்க்கையை உளவியல் நோய் பட்டியலிலிருந்து நீக்கியது.

1974: எரிபொருள் சிக்கன நடவடிக்கையாக பிரிட்டனில் வாகனங்களுக்கு வேகக்கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

1978: மக்கள் சீனக்குடியரசை அமெரிக்கா அங்கீகரிக்கும் எனவும் தாய்வானுடனான தொடர்புகளை துண்டிக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

2005: சர்வதேச நாணய நிதியத்திற்கான தனது கடனை ஆர்ஜென்டீனா முன்கூட்டியே செலுத்தும் என ஆர்ஜென்டீன ஜனாதிபதி நெஸ்டர் கேர்ச்னர் அறிவித்தார்.

2009: போயிங் 787 ட்ரீம் லைனர் விமானம் தனது முதல் பறப்பை மேற்கொண்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X