2025 மே 19, திங்கட்கிழமை

'பழிவாங்கலாலேயே ஜனாதிபதியானேன்'

Menaka Mookandi   / 2016 மார்ச் 29 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

'அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானமையின் பயனாகவே, இறுதியில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது' என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார்.

'இதேவேளை, அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாகும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு தேவையான சலுகைகளை வழங்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்படும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அரச நிர்வாகச் சேவையின் 33ஆவது வருட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X