R.Tharaniya / 2025 ஒக்டோபர் 13 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
1138: சிலியின் அலேப்போ பிரதேசத்தில் பாரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது.
1737: பூமியதிர்வில் 3 லட்சம் மக்கள் கொல்கத்தாவில் கொல்லப்பட்டதுடன் கொல்கொத்தாவின் அரைப்பகுதி பாதிப்புக்கும் உள்ளாகியது.
1852: அவுஸ்திரேலியாவின் மிகப்பழைய பல்கலைக்கழகமான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.
1868: தோமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது கண்டுபிடிப்பான இலத்திரனியல் குரல் இயந்திரத்திற்கு காப்புரிமை பெற்றார்.
1910: அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் ரைட் சகோதரர்கள் உருவாக்கிய விமானத்தில் பறந்ததன் மூலம் விமானத்தில் பறந்த முதல் ஜனாதிபதியானார்.
1939: அணுகுண்டுக்கான சாத்தியம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பிராங்களின் டி ரூஸ்வெல்டுக்கு விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டைன் அறிவித்தார்.
1954: முதலாவது இந்தோசைனா யுத்ததத்தில் வியட்மின் படைகள் வட வியட்நாமை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
1958: நாசாவின் முதலாவது சந்திர ஆய்வுக்கலமான பயனீர் -1 ஏவப்பட்டது.(இக்கலம் பூமிக்குத் திரும்பி எரியுண்டது)
1960: கிழக்கு பாகிஸ்தானில் வீசிய சூறாவளியில் 6000 பேர் பலி.
1968: அப்பலோ பயணத் தொடரில் மனிதர்களைக் கொண்ட முதலாவது விண்கலம் (அப்பலோ -7) ஏவப்பட்டது.
1882: 545ஆம் ஆண்டு பிரான்ஸுடனான யுத்தத்தின்போது மூழ்கிய இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னனின் கொடிக்கப்பல் 447 ஆண்டுகளின்பின் கடலடியிலிருந்து மீட்கப்பட்டது.
1987: தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக இந்திய அமைதிப்படைகள் ஒபரேஷன் பூமாலை நடவடிக்கையை ஆரம்பித்தன.
1986: பனிப்போர் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனும் சோவியத் யூனியன் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவும் ஏவுகணை குறைப்பு நடவடிக்கை குறித்து கலந்துரையாடுவதற்காக ஐஸ்லாந்தில் சந்தித்தனர்.
11 minute ago
19 minute ago
33 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
33 minute ago
33 minute ago