Janu / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
903 : அமெரிக்கா, இந்தியானா பொலிசில் ரயில் விபத்தில் 17 உயிரிழந்தனர்.
1913 : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.
1918 : முதலாம் உலகப் போர் – ஆத்திரியா - ஹங்கேரி 1867 ஒப்பந்தம் கைவிடப்பட்டு, ஹங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது.
1922 : பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.
1924 : உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.
1931 : தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.
1940 : இரண்டாம் உலகப் போர் - பிரிட்டன் சண்டை முடிவுற்றது. ஐக்கிய இராச்சியம் ஜேர்மனியின் முற்றுகையை முறியடித்தது.
1941 : இரண்டாம் உலகப் போர் - ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜேர்மனியப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1954 : அல்ஜீரியாவில் பிரெஞ்ச் ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.
1956 : சூயெஸ் நெருக்கடி - ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு சூயஸ் கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.
1961 : ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.
1963 : இந்தியானா பொலிசில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற புரொப்பேன் தாங்கி வெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டு, 400 பேர் காயமடைந்தனர்.
1968 : வியட்நாம் போர் - பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.
1973 : அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.
1979 : மெக்சிக்கோ நகரில் வெஸ்ட்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.
1984 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
1996 : பிரேசில், சாவோ பாவுலோவில் டாம் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.
1999 : ஜெசி மார்ட்டின் 11 மாதங்கள் பாய்க்கப்பலில் தனியே இடைவிடாது உலகைச் சுற்றி வந்து மெல்பேர்ண் திரும்பினார்.
1999 : எகிப்திய விமானம் ஒன்று மசாஸ்செட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.
2000 : சோயுசு டிஎம்-31 விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் நடத்துவதற்கான முதலாவது குழுவினரை ஏற்றிச் சென்றது.
2000: சிங்கப்பூர் போயிங் 747 - 400 விமானம் தாய்பெய் நகரில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.
2003 : 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார். இவர் 2018 இல் மீண்டும் தனது 92 ஆவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2011 : உலக மக்கள் தொகை ஏழு பில்லியனைத் தாண்டியது.
2015 : மெட்ரோஜெட் விமானம் 9268 வடக்கு சினாயில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர்.
2017 : நியூயார்க் நகரில் சுமையுந்து ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

3 hours ago
03 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
03 Nov 2025