Yuganthini / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
1786: கப்டன் பிரான்சிஸ் லைட், மலேஷியாவில் முதலாவது பிரித்தானிய கொலனியை ஆரம்பித்தார்.
1804: ஆஸ்திரியாவில் இரண்டாம் பிரான்சிஸ் மன்னரானார்.
1952: ஜோர்டான் மன்னராக பின் தலால் பதவியேற்றார்.
1960: சாட் நாடு சுதந்திரம் பெற்றது.
1965: கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1968: பிரித்தானியாவின் நீராவி ரயில், தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
1972: வியட்நாம் போர் - கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமைவிட்டுப் புறப்பட்டனர்.
1975: போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் "மாரியோ லெமொஸ் பிரெஸ்" தலைநகர் டிலியைவிட்டுத் தப்பினார்.
1984: வானொலி ஒன்றுக்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றேகன் கூறியது: "எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்".
1999: ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003: ஆப்கானிஸ்தானில் நடவடிக்கையில் ஈடுபடும் படைகளின் தலைமைப் பொறுப்பை நேட்டோ ஏற்றது.
2003: ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.
2006: யாழ். குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ-9 நெடுஞ்சாலை, காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.
20 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
45 minute ago