Janu / 2023 ஜூன் 28 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1911 : நாக்லா என்ற விண்கல் எகிப்தில் வீழ்ந்தது.
1914 : ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட், அவரது மனைவி இளவரசி சோஃபி ஆகியோர் சாரயேவோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, காவ்ரீலோ பிரின்சிப் என்ற செர்பிய தேசியவாதியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முதலாம் உலகப் போர் தொடங்க இது காரணமானது.
1917 : முதலாம் உலகப் போர் - கிரேக்கம் கூட்டு அணிகளுடன் இணைந்தது.
1919 : வெர்சாய் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஜேர்மனிக்கும் முதலாம் உலகப் போரில் நேச அணிகளுக்கும் இடையில் போர் முடிவுக்கு வந்தது.
1922 : ஐரிய உள்நாட்டுப் போர் டப்லின் நகரில் ஆரம்பமானது.
1926 : காட்லீப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரின் நிறுவனங்கள் இணைக்கப்பட்டு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் உருவானது.
1940 : ருமேனியாவிடம் இருந்து மல்தோவாவை சோவியத் ஒன்றியம் கைப்பற்றியது.
1942 : இரண்டாம் உலகப் போர் - நாட்சி ஜெர்மனி சோவியத் ஒன்றியம் மீது நீலத் திட்டம் என்ற பெயரில் தாக்குதலை ஆரம்பித்தது.
1948 : பனிப்போர் - டீட்டோ–இசுட்டாலின் பிரிவை அடுத்து யுகொஸ்லாவியப் பொதுவுடமைவாதிகளின் அணி கொமின்ஃபோர்மில் இருந்து நீக்கப்பட்டது.
1950 : கொரியப் போர் - சியோல் வடகொரியப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1950 : கொரியப் போர் – 100,000 க்கும் அதிகமான கம்யூனிச சிந்தனையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1950 : கொரியப் போர் - கொரிய மக்கள் இராணுவம் சியோல் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் 700 - 900 வரையானோர் கொல்லப்பட்டனர்.
1964 : மல்கம் எக்ஸ் ஆப்பிரிக்க - அமெரிக்க ஒற்றுமை அமைப்பைத் தோற்றுவித்தார்.
1973 : வடக்கு அயர்லாந்தில் முதற்தடவையாக தேசியவாதிகளுக்கும், ஒன்றியவாதிகளுக்கும் இடையே அதிகாரப் பகிர்வுக்கு வகை செய்யும் முகமாக பொதுத் தேர்தல்கள் இடம்பெற்றன.
1981 : தெகுரானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இசுலாமிய குடியரசுக் கட்சியின் 73 அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
1995 : மண்டைதீவு படைத்தளத் தாக்குதல் - மண்டைதீவு இராணுவப் படைத்தளத்தை விடுதலைப் புலிகள் தாக்கி அழித்தனர்.
2004 : ஈராக்கில் இடைக்கால அரசிடம் ஆட்சி கையளிக்கப்பட்டது. அமெரிக்கா ஆதரவு ஆட்சி முடிவுக்கு வந்தது.
2009 : ஒண்டுராசு அரசுத்தலைவர் மனுவேல் செலாயா இராணுவப் புரட்சி மூலம் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
2016 – துருக்கியின் இஸ்தான்புல் வானூர்தி நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். 230 பேர் காயமடைந்தனர்.

15 May 2026
15 May 2026
15 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 May 2026
15 May 2026
15 May 2026