Mayu / 2026 மே 04 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்களின் சென்னை நீலாங்கரை இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (மே 4, 2026) நடைபெற உள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவெக கட்சிக்குச் சாதகமாக உள்ளதால், அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அதிக அளவில் குவியக்கூடும் என்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த காலங்களில் அவரது இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீட்டின் மொட்டை மாடி வரை சென்ற பாதுகாப்பு மீறல் சம்பவங்களும் நடந்துள்ளன.
தற்போது நீலாங்கரை இல்லத்திற்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
4 hours ago