Editorial / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட சஞ்சீவ குமார சமரரத்ன என்ற கணேமுல்ல சஞ்சீவ, நீதிமன்ற வளாகத்துக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடிக்க தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், விசேட அதிரடிப்படையினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கணேமுல்ல சஞ்சீவ இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
9 minute ago
11 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
20 minute ago