George / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி, பதவியேற்றுள்ளார்.
ஆட்சி அமைக்க அதிமுக சட்டசபை குழு தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று அதிகாரப்பூரமாக அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, மாலை 4 மணிக்கு ஆளுநர் மாளிகையில் தமிழகத்தின் 13ஆவது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென இராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
நன்றி நியூஸ் 7 தமிழ்
28 minute ago
47 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
47 minute ago
2 hours ago
3 hours ago