2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

Princiya Dixci   / 2020 நவம்பர் 25 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு - கல்கிசை கடற்கரையில் 25 டொல்பின் மீன்கள் இறந்த நிலையில், இன்று (25) காலை கரையொதுங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகள் அவற்றை மீட்டு, கரையின் ஒதுக்குப் புறமாக சேர்த்துள்ளனர்.

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய இந்த டொல்பின்களைப் பார்ப்பதற்கு பொதுமக்கள் ஒன்றுகூடியதால் அங்கு பொலிஸாரும் வரவழைக்கப்பட்டதோடு, பெரும் பரபரப்பு நிலை ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, பாணந்துறை பிரதேச கடற்கரையில் கடந்த மாதம் இவ்வாறு நூற்றுக்கும் அதிகமான திமிங்கிலங்கள் உயிருடன் கரையொதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .