Editorial / 2026 மார்ச் 09 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் வறட்சியான வானிலையைத் தொடர்ந்து, ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியின் அளுத்கம பகுதியில் நேற்று (08) இரவு பாரிய தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
அளுத்கம பகுதியிலுள்ள வனப்பகுதியில் ஆரம்பித்த இந்தத் தீ, தற்போது ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதி வரை பரவியுள்ளது.
இதனால் அப்பகுதியெங்கும் கடும் புகைமூட்டம் காணப்படுவதுடன், தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அளுத்கம பகுதி மக்கள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் தீ விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும், இனந்தெரியாத நபர்கள் அல்லது குழுவொன்று இந்த வனப்பகுதிக்குத் திட்டமிட்டுத் தீ வைத்திருக்கலாம் எனப் பிரதேச மக்கள் பலத்த சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
18 minute ago
24 minute ago
28 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
24 minute ago
28 minute ago
58 minute ago