Editorial / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன் கணவர் மீது கொண்ட அதீத கோபத்தால் செய்துள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எகிப்தில் கொண்டாடப்படும் 'ஷாம் நசீம்' (Sham El-Nessim) என்ற பாரம்பரியப் பண்டிகைக்குத் தன் கணவர் தன்னை அழைத்துச் செல்லாததால் யாஸ்மின் ஆத்திரமடைந்துள்ளார். இந்தக் கோபத்தின் உச்சத்தில், தூங்கிக் கொண்டிருந்த தன் கணவரைச் சிமென்ட் கலவையால் பூசி மூடியுள்ளார்.
யாஸ்மின் முதலில் தன் கணவர் இசாமுக்குத் தேநீரில் மயக்க மருந்து கொடுத்து அவரை மயக்கமடையச் செய்துள்ளார். அவர் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்ற பிறகு, இரண்டு மூட்டை சிமென்ட்டை எடுத்து வந்து அதனைக் கலவையாக்கி, கணவரின் உடல் முழுவதும் கொட்டிப் பூசியுள்ளார். சிமென்ட் நன்றாக இறுகும் வரை அவர் காத்திருந்துள்ளார்.
உடல் முழுவதும் சிமென்ட் கலவை இறுகிய நிலையில் மீட்கப்பட்ட இசாம், தற்போது கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago