2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மக்களுக்கு மற்றுமொரு சலுகை

J.A. George   / 2022 ஜனவரி 31 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (31) முதல் சதொச ஊடாக  தேங்காய் ஒன்று, 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒருவருடத்துக்கு அமுலாகும் வகையில், இதற்கான ஒப்பந்தம் தென்னை அபிவிருத்தி அதிகார சபையுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சந்தையில் தேங்காய் விலை குறைவடைந்தால் சதொசவின் தோங்காய் விலை குறைக்கப்படும். அதேநேரம் தேங்காய் விலை அதிகரித்தால் மாற்றம் மேற்கொள்ளப்பட மாட்டதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், ஒரே நேரத்தில் 5 தேங்காய்களை மாத்திரமே ஒருவரால் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .