J.A. George / 2021 பெப்ரவரி 11 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் நேற்று (10) நள்ளிரவு முதல் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இந்த தொழிற்சங்க நடவடிக்கையினால், அலுவலக ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என இலங்கை ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்றைய தினத்திற்குள் தீர்வு காணப்படுமாயின், தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடுவதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் சங்கத்தின் த லைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில்வே திணைக்களத்தில் ஆளணி பற்றாக்குறை நிலவுவதாகம் ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு திணைக்களத்தினால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
16 minute ago
30 minute ago
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
52 minute ago
1 hours ago