2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சா போதை பொருள்களுடன் பெண் உட்பட 5 பேர் கைது

Super User   / 2012 ஜூன் 19 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

பொத்துவில் பிரதேசத்தில் கஞ்சா போதை பொருள்களுடன் பெண் உட்பட ஜந்து பேரை கடந்த இரு தினங்களிற்கு கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்தகுமார தெரிவித்தார்.

பொலிசாருக்கு கிடைத்த தககல் ஒன்றினையடுத்து பொத்துவில் ஆர்.எம்.நகர் பிரதேசத்தல் உள்ள வீடு ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை
பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இதன்போது பெண் ஒருவரை கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதுடன் 13 கிராம் கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, பொத்துவில் - களப்புக்கட்டு பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கஞ்சா போதைப்பொருளுடன் 4 பேரை நேற்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளதுடன் இவர்களிடமிருந்து ஒரு தொகை கஞ்சாவை மீட்டுள்ளன.

குறித்த நான்கு பேரையும் பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ.என்றிஸ்வான் முன்னிலையில் ஆயர்படுத்திய போது, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  நீதிபதி உத்தரவிட்டார்



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .