2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவருக்கு தலா 10,000 ரூபா தண்டம்

Super User   / 2013 ஜனவரி 17 , மு.ப. 11:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த இளைஞர் ஒருவருக்கு தண்ட பணமாக 10,000 ரூபாவை அம்பாரை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி நேற்று புதன்கிழமை விதித்துள்ளார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து இறக்காமம் தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றினை செவ்வாய்க்கிழமை மாலையில் முற்றுகையிட்டு சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம் கஞ்சா கட்டினை பொலிஸார் மீட்டதுடன் 23 வயதுடைய இளைஞரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நேற்று புதன்கிழமை அம்பாரை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது இவரை 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமாக செலுத்தமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, அம்பாறை மாந்தோட்டம் பிரதேசத்தில் கஞ்;சா போதைப்பொருள் வைத்திருந்த முதியவர் ஒருவருக்கும் தண்ட பணமாக 10,000  ஆயிரம் ரூபாவை  அம்பாரை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரிங்கிஇன்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X