2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படம்: 5,000 ரூபா அபராதம்

Super User   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

அம்பாறை, ஹிங்குராணை பிரதேசத்தில் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை வைத்திருந்த இளைஞருக்கு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரியங்கி 5,000 ரூபா அபராதம் விதித்துள்ளார்.

தமண பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை ஹிங்குராணை நகர் பகுதியில் 23 வயது இளைஞரின் கையடக்க தொலைபேசியை பொலிசார் கைப்பற்றி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது கையடக்க தொலைபேசியில் ஆபாசப் படங்கள் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நேற்று புதன்கிழமை அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.பிரியங்கி முன்னிலையில் ஆயர்படுத்தப்பட்டார். இதன்போது நீதிபதி 5,000 ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X