2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கல்முனையில் 1300 ஏக்கர் நெற்காணிகள் பயன்படுத்தமுடியாது: விவசாய அமைப்புகள்

Kogilavani   / 2013 மார்ச் 11 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்


அம்பாறை மாவட்டம், கல்முனைப் பிரதேசத்தை அண்டியுள்ள சுமார் 1300 ஏக்கர் நெற்காணிகளை செய்கைக்கு உட்படுத்தப்பட முடியாத நிலை தோன்றியுள்ளதாக விவசாய அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

கல்முனைப் பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள இறைவெளிக்கண்டம், கல்முனைக்கண்டம், பண்டிதீவு கண்டம் ஆகிய கண்டங்களில் சுமார் 1700ஏக்கர் நெற்காணிகள் உள்ளன.

எனினும் இறைவெளிக்கண்டத்தின் ஊடாக நீரை விநியோகிக்கும் அணைக்கட்டில் கதவுகள் பொறுத்தப்படாததாலும், அண்மையில் ஏற்பட்ட வெள்ளநிலை காரணமாகவும் இறைவெளிக்கண்டத்திலுள்ள தற்காலிக அணைக்கட்டு சேதமுற்றுள்ளதனாலும் சுமார் 1300ஏக்கர் நெற்காணிகள் இம்முறை செய்கை பண்ணமுடியாத நிலையில் காணப்படுவதாக விவசாய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அமைச்சு, நீர்பாசன திணைக்களம் மற்றும் மாகாண விவசாய அமைச்சு ஆகியவற்றிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் இம்முறை சுமார் 1300ஏக்கர் காணிகளில் நெற்பயிர்ச்செய்கையை கைவிட வேண்டிய நிலை தோன்றும் என ; கல்முனை கமநல சேவை நிலைய குழுத்தலைவரும், பண்டிதீவு கமக்கார அமைப்பின் பிரதிநிதியுமான ஏ.எச்.ஏ.சித்தீக், கல்முனைக் கண்டம் மற்றும் இறவெளிக்கண்ட கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகளான ஏ.ஜெயகுமார், எம்.ஏ.எம். நஸீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X