Suganthini Ratnam / 2010 நவம்பர் 28 , மு.ப. 08:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் கலாசாலை பயிற்சி ஆசிரியர்களின் 69ஆவது 'கலை அமுதம் 2010' சஞ்சிகை வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கலாசாலையின் சேர் ராஸீக் பரீட் ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசாலையின் அதிபர் அஷ்ஷெய்க் எம்.எஸ். அப்துல் ஹபீழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன், விசேட அதிதியாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக் கலந்துகொண்டனர்.
இங்கு கலை, கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு, நூலின் முதற் பிரதி அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு வழங்கி வைக்கப்பட்டது. கவிஞர் ஆசுகவி அன்புடீன் நூலாவினை நிகழ்த்தினார். கலாசாலையின் விரிவுரையாளர்கள், வருகைதரும் விரிவுரையாளர்கள், ஆசிரிய மாணவர்கள் மற்றும் ஆசியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago