Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 25 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யூ.எல்.மப்றூக்)
கல்முனைப் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான சுடுகலன்கள் (ஆயுதங்கள்) வைத்திருப்போர், அவற்றை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் த்ங்களின் பகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 24ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் பள்ளிவாசல் தலைவர்களுடனான கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கிணங்கவே மேற்படி வேண்டுகோளினை தாம் விடுப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
"குறித்த திகதிக்கு முன்னர் சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கத் தவறுவோருக்கு எதிராக அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோத சுடுகலனை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தப்படும். இக்குற்றத்தைப் புரியும் ஒருவர் 20 வருட கடூழிய சிறைத்தண்டனைக்கு ஆளாக வேண்டிவரும்" எனவும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago