2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை கல்வி வலயத்தில் 300க்கு மேற்பட்ட மேலதிக ஆசிரியர்கள்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கல்வி வலயத்தில் 300க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளதாக கல்முனை கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர் கூறினார்.

கல்முனை கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.தௌபீக்கை கல்முனை அனைத்து பள்ளிவாசல்களினதும் அமைப்புக்களினதும் சம்மேளனம் சந்தித்த வேளையில் மேற்கண்டவாறு கூறினார்.

2011ஆம் ஆண்டு புதிய கல்வியாண்டில் கல்முனையின் கல்வி அபிவிருத்தி என்ற தலைப்பில் கல்முனை பெரிய ஜும் ஆ பள்ளிவாசலின் காரியாலயத்தில் பள்ளித்தலைவர் வைத்தியர் எஸ்.எம்.அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வொன்று கூடலின் போது அங்கு விஷேட அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை கல்வி வலயக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு கூறியதுடன் அவர்கள் அனைவருக்கும் இடமாற்றக்கடிதம் அனுப்பப்படும் எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .