2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சம்மாந்துறையில் 637 பேருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 26 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 637 பேருக்கு உத்தேச பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலகம் மற்றும் நோர்வேயின் அகதிகள் பேரவையின்  (என்.ஆர்.சீ) அனுசரணையில்  இலங்கை பதிவாளர் நாயகத் திணைக்களத்தின்  அனுமதியுடன் சம்மாந்துறை பிரதேச செயலக பதிவாளர் பிரிவும் சமுர்த்திப் பிரிவும் இணைந்து பிறப்புச் சான்றிதழ்கள் வழங்குவதை ஏற்பாடு செய்தது.

இதுவரைக்கும் பிறப்புப் பதிவில்லாத  637 பேருக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை பதிவாளர் நாயகத் திணைக்களத்தின் உதவிப் பதிவாளர் நாயகம் என்.எம்.நயீம், கௌரவ அதிதிகளாக நோர்வே அகதிகள் பேரவையின்; (என்.ஆர்.சீ)திட்ட ஆலோசகர் கிறிஸ்டியன் பேய்சென், திட்ட இணைப்பாளர் சட்டத்தரணி ஆரிகா காரியப்பர், திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பாரிஸ், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • najeem Thursday, 28 June 2012 04:47 AM

    நல்ல காரியம் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .