2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 9 பேர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 14 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 9 பேரை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

திருக்கோவில், விநாயகபுரம், தாண்டியடி, தம்பிலுவில், தம்பட்டை ஆகிய பிரதேசங்களில் இலங்கை மின்சார சபையின் அம்பாறை மாவட்டக் கிளையினரும் திருக்கோவில் பொலிஸாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போது  சட்டவிரோதமாக மின்சாரம் பெற்று வந்ததாகக் கூறப்படும் 9 பேரை கைதுசெய்துள்ளதுடன், மின்சார வயர்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறு  கைதுசெய்யப்பட்டவர்களை பொத்துவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை  திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .