2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொத்துவிலில் குளங்கள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேச கமநல சேவைப் பிரிவுக்கு உட்பட்ட சிறிய நீர்ப்பாசனக் குளங்களைப் புனரமைக்கும் வேலை நீர்ப்;பாசனத் திணைக்களத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இக்குளங்களின் புனரமைப்புக்காக சுமார் 01 கோடி 50 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பிரதேச கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம்.எல்.அப்துல் ரஹீம், நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

தாமரைக்குளம், உடகோவை, கிரான்கோவை, குளத்துவான், மருதம் குளம் ஆகிய குளங்களே புனரமைக்கப்படுகின்றன.
மேலும், பொத்துவில் கடியான் பள்ளம் நீர்ப்பாசனக் குளத்தை புனரமைப்புச் செய்வதற்காக 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நீண்டகாலத்துக்குப் பின்னர் நீர்ப்பாசனக் குளங்களை புனரமைப்பதற்கு கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .