2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மணல் அகழ்ந்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த குற்றச்சாட்டில் மூன்று பேரை சனிக்கிழமை (19) மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சம்புக்களப்பு வயல் வாய்க்காலில் மணல் அகழ்ந்தபோது, உழவு இயந்திரம் மற்றும் லான்ஸ்மாஸ்டருடன் இரண்டு பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதேவேளை, ஒலுவிலில்; கழிவோடை ஆற்றோரத்தில் மணல் அகழ்ந்தபோது,  உழவு இயந்திரத்துடன் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் அட்டாளைச்சேனையைச்  சேர்ந்தவர்கள். பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள  இவர்களை நாளை திங்கட்கிழமை (21) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X