Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அட்டாளைச்சேனைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் வழங்கிய தேசியப்பட்டியல் வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டுமென அட்டாளைச்சேனை பெரிய ஜும்மா பள்ளிவாசலின் தலைவரும் அனைத்துப் பள்ளிவாசல்களின் சம்மேளன தலைவரும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எல்.ஹனீஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
அட்டாளைச்சேனைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் கடந்த பல வருடங்களாக தேசியப்பட்டியல் என்ற மாயையால் அட்டாளைச்சேனை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்.
கடந்த தேர்தலிலும் இம்மக்களுக்கு தேசியப்பட்டியல் பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்ற உத்தரவாதம் பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸால் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களைப் போல் அல்லாது இம்முறை அட்டாளைச்சேனை மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் தொலைபேசியூடாக தன்னிடமும் உறுதியளித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் மூன்று பிரதிநிதித்துவத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறுவதற்கு அட்டாளைச்சேனை மக்களின் வாக்குகள் பிரதானமாக அமைந்ததை யாவரும் அறிவர்.
இம்முறையும் இம்மக்கள் ஏமாற்றப்படுவார்களானால், மக்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மீது நம்பிக்யிழப்பது தவிர்க்க முடியாததாகி விடும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago