2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வேலைக்கான உணவு சிரமதானம்

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt

(யூ.எல்.மப்றூக்)

கல்முனை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் வேலைக்கான உணவு சிரமதான வேலைத் திட்டம், மருதமுனை அல் மதீனா வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன் போது, கல்முனைப் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கே.ராஜதுரை, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகஸ்தர் பி.எம்.அறபாத், அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.எம்.எம்.நியாஸ், அம்பாறை மாவட்ட செயலக அத்தியட்சகர் ஐ.எம்.அபுல் ஹசன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலாளர் எஸ். ஜவ்பர் சாதிக் ஆகியோர் வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இச்சிரமதான வேலைத்திட்டத்தில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை சூழலிலுள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

alt

alt


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .