2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை

Super User   / 2010 நவம்பர் 20 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை -  நிந்தவூர் பிரதேசங்களின் எல்லையாக அமைந்துள்ள களியோடை பாலம் சேதமடைவதைத் தடுக்கும் வகையில் ஆற்றில் உருவாகியுள்ள மண்மேட்டினை அகற்றும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஈடுபட்டு வருகின்றது.

களியோடை ஆற்றில் தோன்றியுள்ள மண்மேடு காரணமாக ஆற்று நீர் பாலத்தைப் பாதிக்கும் வகையில் ஓடுவதால், குறிப்பிட்ட மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

சுதந்திரத்துக்கு முன்னர் அமைக்கப்பட்ட பழைய களியோடைப் பாலமாலம் உடைக்கப்பட்டு, அவ்விடத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் புதிய பாலமொன்று நிர்மாணிக்கப்பட்டது.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதிரே இப்பாலம் அமையப் பெற்றுள்ளது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .