2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்

Super User   / 2010 நவம்பர் 23 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

ஏதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறவுள்ள இளைஞர் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்தில் துரிதமாக நடைபெற்று வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் 45 உறுப்பினர்களைத் தெரிவு செய்தற்கு 234 பேர் களத்தில் குதித்துள்ளதோடு, சுமார் 50000 இளைஞர் கழக உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அமையவுள்ள இளைஞர் நாடாளுமன்றத்தில் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 20 பேர் தெரிவு செய்தற்கென 89 வேட்பாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 14 பேர் தெரிவு செய்தற்கென 102 வேட்பாளர்களும், திருகோணமலை மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 11 பேர் தெரிவு செய்தற்கென 43 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இளைஞர் கழக உறுப்பினர்களை சந்தித்து ஆதரவினை திரட்டி வருகின்றனர்.
நகர் பகுதிகளில் போஸ்டர்களும், காட்சி பதாகைகலும்  காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .