2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறையில் ஆணின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 26 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

சம்மாந்துறை மாவடிபள்ளியாற்றில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 25ஆம் திகதி ஆற்றில் மீன்பிடிக்கச் இந்நபர் காணாமல்போன நிலையில், இன்று காலை தேடியபோது மீன்பிடி வலையில் சிக்கியவாறு குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நடராஜனந்த வீதி காரைதீவு - 2 ஐ  சேர்ந்த சுந்தரலிங்கம் கனகரத்தினம் (வயது 45) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

மேற்படி சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X