2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் தொடர் மழை; பொதுமக்கள் பாதிப்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 24 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கல்முனை பிரதேசத்திலுள்ள வீடுகளும், கல்வி நிலையங்களும் வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

நேற்றுமுன்தினம் முதல் இப்பிரதேசத்தில் பெய்துவரும் மழையினால் குடியிருப்புக்களும் தனியார் கல்வி நிலையங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதனால் குடியிருப்பாளர்களும், உயர்;தர வகுப்பில் கல்விபயிலும் மாணவர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இப்பிரதேசங்களில் நீர் வடிந்தோடுவதற்கான வடிகாண் வசதிகள் சீரற்ற நிலையில் காணப்படுவதே வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான பிராதான காரணம் என பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.

மேலும் சில தினங்களுக்கு மழை தொடரும் பட்சத்தில் இப்பிரதேச மக்கள் வேறு பிரதேசங்களுக்கு இடம்பெயர நேரிடும் என சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .