2025 ஜூன் 07, சனிக்கிழமை

குன்றும் குழியுமாக கல்முனை பிரதான பஸ் நிலையம்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, கல்முனை பிரதான பஸ் நிலையம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.


பஸ் நிலைய வீதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதிகள் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அவற்றில்; தேங்கி நிற்கும் நீர் பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை  ஏற்படுத்துகிறது.


மழைக் காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இவ் பஸ் நிலைய வீதிகளை செப்பனிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை அறிவித்தல் விடுத்தபோதிலும்,  எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. இதேவேளை, பஸ் நிலையத்தின் மலசலகூடம் பிரயாணிகள் பயன்படுத்த முடியாவாறு நீர் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .