2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

சித்திரப்பாட ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 31 , மு.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை கல்வி வலயத்தில் சித்திரப்பாடத்திற்கு நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக அப்பாடத்தில் ஆற்றலும் மற்றும் அனுபவமுள்ள ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சி அளிக்கப்பட்டது.

நீண்டகாலமாக  நிலவும் சித்திரப்பாட ஆசிரியர்கள் பற்றாக்குறையால் இவ்வலய மாணவர்கள் சித்திரப்பாடத்தில் சித்தியடைவதில் மந்த நிலை காணப்பட்டது.  இதனால் தனியார் நிறுவனத்தின் அனுசரனையுடன் முதற்கட்டமாக 30 ஆசிரியர்களுக்கு கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபிக்கின் வழிகாட்டலில் இப்பயிற்சி வழங்ககப்பட்டது. இந்நிகழ்வில் விரிவுரையாளர்களாக முறைசாராக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.சக்காப் மற்றும் சித்திரப்பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி யாசோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சி முடிவடைந்தவுடன் பயிற்சி வழங்கப்பட்ட ஆசிரியர்கள் சித்திரப்பாட ஆசிரியர்களாக கடமையாற்றுவதற்கு பணிக்கப்படுவர். 


  Comments - 0

  • Atham Bawa Ameen Saturday, 12 February 2011 07:07 PM

    இது நல்ல கல்வியாளர்களை உருவாக்கும் சிறந்த நட்பணியாகும். முயற்சி மேலும் தொடர எனது நல்வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X