2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

தப்பிப்பிழைத்த மீனவர்கள்

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தெய்வாதினமாக உயிர் தப்பிய நான்கு மீனவர்களும் தேத்தாத்தீவு தமிழ் மக்களுக்கு நன்றி கூறியதுடன் அம்பாறை மாவட்ட மீனவர் சங்கமும் நன்றி கூறுகிறது.

கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு காரணமாக நேற்று கல்முனையைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் இயந்திர படகை வாழைச்சேனை படகு இறங்கு துறைக்;கு கொண்டு செல்வதற்காக கடல் மூலம் நான்கு மீனவர்கள் பயணித்தனர்.

அவ்வேளையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேத்தாத்தீவு கடற்பரப்பினால் பயணம் செய்யும் போது கடலில் ஏற்பட்ட பாரிய கொந்தளிப்பால் அப்படகு கவிழ்ந்ததையடுத்து மீனவர்களும் கடலில் வீசப்பட்டனர். படகும் அடிபட்டு உடைவுகளுடன் கரையொதுங்க, அப்பிரதேச மக்கள் மழை, காற்று மற்றும் வெள்ளத்தையும்; பொருட்படுத்தாது படகையும் மீனவர்களையும் காப்பற்றினார்கள்.

இது தொடர்பாக தழிழ்மிரருக்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட ஆழ்கடல் இயந்திரப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் எம்.எஸ்.நஸீர்:
400இற்கும் மேற்பட்ட இயந்திரப்படகுகள் கல்முனைப் பகுதியில் உண்டு. இதை நம்பி ஆயிரக்கணக்கான குடும்பங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட கடல் கொந்தளிக்கும் காலங்களில் எமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்குரிய எதுவித வசதியும் இங்கு இல்லாமையினால் நீண்ட தூரம் பயணித்து வாழைச்சேனைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. சிலவேளைகளில் பாதுகாப்பாக சென்றடைந்துவிடுவோம். சிலவேளைகளில் இவ்வாறும் அனர்த்தம் ஏற்பட்டு ஏற்கனவே பல உயிர்களையும் உடமைகளையும் பறிகொடுத்தும் உள்ளோம்.

காலத்திற்கு காலம் வரும் தேர்தல்களில் மீனவர் சமூகங்களின் வாக்குகளை சூரையாடுவதற்காக அரசியல்வாதிகள் எங்களுக்கு சாய்ந்தமருதிலுள்ள மீனவர் படகு இறங்கு துறைக்கு ஏற்ற தோணாவை மையமாகக் கொண்டு அவ்விடத்தில் படகு தரிப்பிடம் அமைத்துத் தருவதாகக் கூறி பல தடவைகள் அடிக்கல்லும் நாட்டியும் உள்ளனர். ஆனால் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். மீண்டும் அடுத்த தேர்தலிலும் இதே நிலை தொடரும். அவர்கள் எம்மால் சுகபோக வாழ்கை வாழ நாம் உயிர் தப்பிப்பிழைத்து அவதியுறும் வாழ்க்கை வாழ்கிறோம்.

இன்னும் கடலில் பல படகுகள் செய்வதறியாது கிடக்கிறது. எமது பகுதியிலுள்ள ஒலுவிலில் அமைக்கப்பட்டுவருகின்ற துறைமுகத்திலாவது இடம் தருவார்கள் என்றால் அது இன்னும் எமக்கு இலகுவாக அமையும். இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசியும் அவர்கள் அனுமதி தரவில்லை. உரியவர்களிடம் பேசுவதற்கு எம்மிடம் வாய்மையுள்ள அரசியல்வாதிகளும் இல்லாமையால் நாம் மேலும் பல சிரமத்துக்குள்ளாகிறோம் என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • ramlan Saturday, 05 February 2011 03:25 PM

    உண்மை விடயம் கூறப்பட்டுள்ளது .

    Reply : 0       0

    kaium Sunday, 06 February 2011 12:35 AM

    பாவம் கல்முனை மக்கள்

    Reply : 0       0

    Atham Bawa Ameen Monday, 07 February 2011 02:42 PM

    மனிதம் இன்னமும் இங்கு வாழ்ந்துகொண்டிருக்கிறது. உயிரின் விலையை உணர்ந்தவர்கள் உண்மையில் மனிதர்கள் அல்ல மகான்கள். அல்லாஹ்வின் அருள் அனைவருக்கும் உண்டாவதாக.

    Reply : 0       0

    s m nafar Monday, 07 February 2011 05:55 PM

    tanathu sakthiai kalmunai makkal arasiyal wathikalukku kaddamal iruppatha pawamana vidayamum wethaniyana vidayamum

    Reply : 0       0

    s m nafar Monday, 07 February 2011 06:12 PM

    கல்முனை மக்கள் சரியான பாடத்தை அரசியல் வாதிகளுக்கு போதித்து இருந்தால் இந்த நிலை எற்பட்டு இருக்கமாட்ட பாவம் மக்களும் நானும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .