2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்கி விவசாயி பலி

Super User   / 2011 பெப்ரவரி 06 , மு.ப. 06:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். மாறன்)

அம்பாறை திருக்கோவில் வயல் பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில் பாவட்டா  வயல் பிரதேசத்தில் அதிகாலை 5 மணியளவில் வேளாண்மை  காவலில்   ஈடுபட்டு கொண்டிருந்த போதே யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

திருக்கோவில், விநாயகபரம் 4ஆம் பிரிவு பாடசாலை வீதியை சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தையா நாகராஜா (வயது-60) என்பவரே உயிரிழந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .