2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

களியோடை ஆறு மீண்டும் பெருக்கெடுப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 07 , மு.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் பகல் வேளைகளில் பெய்த கடும் மழை காரணமாக, ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அருகிலுள்ள களியோடை ஆறு மீண்டும் பெருக்கெடுத்தோட ஆரம்பித்துள்ளது.

இதனால், ஆற்றினை அண்டிய பகுதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் சில இடங்களில் தென்னை மரங்களின் பெரும் பகுதியினையே மூழ்கடிக்கும் அளவுக்கு நீர் பெருக்கெடுத்தோடுவதை அவதானிக்க முடிந்தது.

தொடர்ந்து இவ்வாறு களியோடையாறு பெருக்கெடுக்கும் பட்சத்தில், தென்கிழக்குப் பல்கலைக்கழகம் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கலாம் என அஞ்சப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • ki Tuesday, 08 February 2011 04:00 PM

    உங்களது இணையத்தளம் மட்டும்தான் செய்திகளை copy பண்ண விடுவதில்லை. உங்களது ஆங்கில இணையத்தளத்தில் copy பண்ண முடியும். உலகில் சிறந்த இணைய தளங்களில் copy பண்ணி save பண்ண முடியும் போது ஏன் உங்களால் இவ்வசதியை வாசகர்களுக்கு வழங்க முடிவது இல்லை.
    தமிழ் பேசுபவர்களுக்கு இப்படி ஒரு மனமா ?

    Reply : 0       0

    மெய்ப்பொருள் Sunday, 13 February 2011 04:09 AM

    உலகின் ”சிறந்த” இணயத்தளங்களில் copy செய்து paste செய்ய முடியும் என்பது ஒரு தற்போது ஒரு பிரச்சினையா?? விடயங்களை தேடி சேர்க்கும் ஒருவருக்கு தான் அதன் கஷ்டம் புரியும்.தேடி எடுத்து எடிட் பண்ணி தளத்தில் பிரசுரித்த பிறகு அதை பிரதி செய்து இலகுவாக மற்ற தளங்கள் குளிர் காய்வது தானே 'ரொம்ப " சிறந்தது??
    தேடல் இல்லாத முயற்சிகளை விடுத்து தேடி எடுத்து பிரசுரிக்கும் போது அதிலும் தவறு காணும் பண்பு உங்களுக்கு !!
    தமிழ் பேசுபவர்களுக்கு இப்படியும் ஒரு மனமா??

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .