2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர் மீது தாக்குதல்; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அக்கரைபற்றில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலொன்றில் இருவர் காயமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.  

முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மீதான தாக்குதல் சம்பவம் நேற்று வியாழக்கிழமை   இரவு இடம்பெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், காயமடைந்;தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.  

முஸ்லிம் காங்கிரஸின் அக்கரைப்பற்று  கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதான காரியாலயத்தில் நேற்று இரவு 10 மணியளவில் உட்புகுந்த 3 பேர் கொண்ட குழுவினர் அங்கிருந்த ஆதரவாளர்கள்  இருவரை தாக்கி விட்டு தப்பியோடியுள்ளனர்;.

சரூபுதீன் (வயது 50) என்பவரே படுகாயமடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .