2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ள நீர் வடிந்தோட தோண்டப்பட்ட வீதிகள் மூடப்படாததனால் மக்கள் விசனம்

Kogilavani   / 2011 மார்ச் 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தில்  வெள்ள அனர்தத்தின் போது நீர் வடிந்தோடுவதற்காக அகழப்பட்ட வீதிகள் இதுவரை மூடப்படாததனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில், உள்ளூராட்சி சபைகளினாலும்,  பொதுமக்களினாலும் வீதிகள் தோண்டப்பட்டன.

வெள்ளம் வடிந்து ஒரு மாதகாலத்தை கடந்தும் கூட,  இவ் வீதிகள் இதுவரை மூடப்படாமையால்  குழிகளில் நீர்தேங்கி நின்று நோய்கள் பரவும் அபாய நிலை  தோன்றியிருப்பதாக சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே  இந்த குழிகளை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .