2025 ஜூன் 09, திங்கட்கிழமை

வீடுடொன்று தீப்பற்றி எரிந்துள்ளது

Super User   / 2011 மார்ச் 20 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

அம்பாறை கோமாரி பிரதேசத்தில்  வீடுடொன்று நேற்று சனிக்கிழமை இரவு தீப்பற்றி எரிந்துள்ளது.

கோமாரி செல்வபுரத்தில் உள்ள குறித்த வீடடின் உரிமையாளர் குடும்ப சகிதம் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி வந்தபோது வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.

உடனடியாக அயலவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டுவர முயற்சித்த போதும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளது இதனால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது

இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உறவினர் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .