2025 ஜூன் 09, திங்கட்கிழமை

அட்டாளைச்சேனை பாடசாலைகளுக்கிடையேயான தமிழ்மொழிதினப் போட்டி

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 26 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனை கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்மொழிதினப் போட்டி நிகழ்ச்சிகள் நாளை புதன்கிழமை அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் காலை 8.30 மணி முதல் நடைபெறவுள்ளதாக அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம்.இப்றாகிம் தெரிவித்தார்.

எழுத்தாக்கப்போட்டி, அரங்கப்போட்டி என இரண்டு பிரிவுகளில் மேற்படி தமிழ்மொழிதினப் போட்டிகள் நடைபெறவுள்ளன. எழுத்தாக்கத்தில் 14 வகையான போட்டிகளும் அரங்கப் போட்டிகளில் 24 வகையான போட்டி நிகழ்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

எழுத்தாக்கப் போட்டிகள் கடந்த வியாழக்கிழமை பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றன.
இதனையடுத்து, மாணவர்களின் அரங்கப்போட்டி நிகழ்வுகள் நாளையதினம் அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளன.

தமிழ்மொழிதினப் போட்டிகளில் அட்டாளைச்சேனை கோட்டத்திலுள்ள 22 பாடசாலைகள் பங்குகொள்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .