2025 ஜூன் 09, திங்கட்கிழமை

தமிழ் மொழி தின அரங்கப் போட்டி

Kogilavani   / 2011 ஏப்ரல் 27 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைக் கோட்டக் கல்வி அலுவலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ் மொழி தின அரங்கப் போட்டி நிகழ்ச்சிகள் இன்று அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனைக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாகிம் தலைமையில் இடம்பெற்ற இந்  நிகழ்வுகளில் வில்லுப்பாட்டு, நாட்டார்பாடல், பாவோதல் உள்ளிட்ட 24 வகையான போட்டி நிகழச்சிகள் மேடையேற்றப்பட்டன.

அட்டாளைச்சேனை கோட்டத்தினைச் சேர்ந்த 22 பாடசாலைகளும் இந்த தமிழ்மொழி தினப் போட்டியில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களாக - மூத்த கவிஞர்களான கலாபூசண் ஆசுகவி அன்புடீன், சோலைக்கிளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .