2025 ஜூன் 09, திங்கட்கிழமை

சட்டவிரோத உர மூடைகள் பறிமுதல்

Super User   / 2011 மே 01 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் வழங்கிய 280 உர மூடைகளை கல்முனை பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வேறு பொதிகளில் மாற்றிக் கொண்டிருந்தவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளதுடன் உரங்கள் பொதி செய்யும் உபகரணங்களையும் மீட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து கல்முனைக்குடி பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில்  280 உர மூடைகளை வேறு பொதிகளில் மாற்றப்பட்டு கொண்டிருந்த போது விசேட அதிரடிப்படையினர் ஒருவரை கைது செய்ததுடன் உரங்களை பொதி செய்யும் உபகரணம் போன்ற பொருட்களை மீட்டு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .