2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

தென்கிழக்கு பல்கலை மாணவர்களுக்கான ஊடகப் பன்மைத்துவ செயலமர்வு

Menaka Mookandi   / 2011 மே 20 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஊடகப் பன்மைத்துவம் தொடர்பான ஒரு நாள் செயலமர்வு இன்று பல்கலைக்கழக கலை, கலாசார பீட கேட்போர் கூடத்தில் தேசிய சமாதானப் பேரவையின் ஊடக இணைப்பாளர் சாந்த மஹிந்தபால தலைமையில் நடைபெற்றது.

சர்வதேச இனத்துவ கற்கைகள் நிலையத்தின் ஆராச்சியாளர் சுமித் சமிந்த, த.நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியர் வில்சன் குணதாஸ் மற்றும் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஆகியோர்கள் வளவாளராக கலந்து கொண்டு ஊடகப் பன்மைத்துவம் சம்பந்தமாக மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இங்கு 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .