2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கல்முனையில் திடீர் தீ விபத்து

Suganthini Ratnam   / 2011 ஜூலை 04 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ்,எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்து  காரணமாக இரண்டு கடைகள் உட்பட வை.எம்.சீ.ஏ அலுவலகமும் எரிந்து சேதமாகியுள்ளன.

கல்முனை நகரில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக வை.எம்.சீ.ஏ. அலுவலகமும்  நாளிதழ்கள், பாடசாலை புத்தகங்கள், காகிதாதிகள் விற்பனை செய்யும் கடையொன்றும் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளன. அத்துடன், புடவை   விற்பனை நிலையமொன்றின் ஒரு பகுதியும் எரிந்துள்ளது.

தீயணைக்கும் நடவடிக்கையில் கல்முனை மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவு ஈடுபட்டுள்ளது.

இந்த தீ விபத்து மின்னொழுக்கினால் ஏற்பட்டுள்ளதென தெரிவித்த கல்முனை பொலிஸார், இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • Majeed Monday, 04 July 2011 05:59 PM

    எல்லாமே சாம்பலாகிய பின் ஏன் நீரை வீண் விரயம் செய்கிறார்? திறமையான தீயணைப்பு பிரிவு ஓன்று MC ல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

    Reply : 0       0

    ameer Monday, 04 July 2011 07:39 PM

    தீ பரவி இரண்டு மணி நேரத்தின் பின்னர் மாநகர சபை தீ அணைக்கும் படையினர் வந்தனர். சுணக்கம். தீ அணைக்கும் இயந்திரத்தில் டீசல் இல்லையாம் . கல்முனை மா நகரசபை தீ நடந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. வாழ்க கல்முனை மாநகரசபை .. எல்லாம் முடிந்தபின்னர் தீ அணைக்கும்படை எதற்கு .....

    Reply : 0       0

    ilham Tuesday, 05 July 2011 01:40 AM

    நல்ல வேளை நீர் இல்லை என்று சொல்லாமல் விட்டார்கள்.

    Reply : 0       0

    haja Tuesday, 05 July 2011 02:54 AM

    கல்முனை மா நகர சபையிடம் தீ அணைக்கும் படைப்பிரிவு உள்ளதா? அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் அவர்களை எமர்ஜன்சி வேளையில் எப்படி எதிர்பார்ப்பது??

    Reply : 0       0

    Majeed Tuesday, 05 July 2011 03:24 AM

    இங்கு தண்ணீர் பாய்ச்சுவது தோட்டக்காரரா? Haja

    Reply : 0       0

    kumar Tuesday, 05 July 2011 03:07 PM

    தோட்டக்காரா் இல்லாம வேறு யாரு?

    Reply : 0       0

    SAJA Wednesday, 06 July 2011 01:00 AM

    வீட்டில் இருந்துதான் வரவேண்டும்.
    அதுதான் சுணக்கம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5