2025 ஜூன் 09, திங்கட்கிழமை

ஊடகவியலாளருக்கு கல்முனை மாநகர சபை செயலாளர் அச்சுறுத்தல்

Super User   / 2011 ஜூலை 05 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகர சபையின் செயலாளர் எம்.ஏ.எம்.அலாவுதீன் பிராந்திய ஊடகவியலாளரான யூ.எல்.மப்றூகை இன்று செவ்வாய்க்கிழமை தொலைபேசி மூலம் அச்சுறுத்தியதாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் மப்றூகிற்கு அச்சுறுத்தல் அழைப்பு வந்த தொலைபேசி இலக்கத்திற்கு கல்முனை பொலிஸ் நிலைய சிறுகுற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமந்த தொடர்புகொண்டு விசாரணை நடத்தினார்.

ஆப்போது, கல்முனை மாநகர சபையின் செயலாளர் எம்.ஏ.எம்.அலாவுதீன், தனது தொலைபேசியில் தொடர்புகொண்டு மப்றூகை அச்சுறுத்தியதாக மாநாகர சபை உத்தியோகஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

கல்முனை நகரில் நேற்று திங்கட்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு முறையாக செயற்படவில்லை என கடை உரிமையாளர்கள் தெரிவித்ததை செய்தி எழுதியமேயே இவர் அச்சுறுத்தப்பட்டமைக்கான காரணம் என தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0

  • rasmin Tuesday, 05 July 2011 11:05 PM

    இலங்கையில் இது என்ன புதுசா ?....
    மப்ரூக் சீக்கிரம் வெளிநாடு போகலாம்....

    Reply : 0       0

    Ahamed Junaid Tuesday, 05 July 2011 11:26 PM

    ஏனப்பா அச்சுறுத்த வேண்டும். விடயத்தை தெளிவு படுத்தி மீண்டும் எழுதுங்கள் என்று சொல்ல முடியும் தானே? அதிகாரிகளும் அச்சுறுத்தல் செய்தால் படித்ததில் என்ன பிரயோசனம்?. மானிட பண்புடன் நடந்து கொள்ளவதுதான் மனிதன் .. இல்லையேல் இரண்டு கால்கள் உள்ள மிருகமே.

    Reply : 0       0

    AJ Wednesday, 06 July 2011 06:16 AM

    இலங்கையில் நிக்கிறோம்.
    அதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.

    Reply : 0       0

    siraj saudi arabia Wednesday, 06 July 2011 04:23 PM

    நீங்கள் செய்தது ரொம்ப சரி ,மப்றூக்

    Reply : 0       0

    Ravichandran MALDIVES Wednesday, 06 July 2011 10:42 PM

    நியாயம் எதுவோ அதுவே சமாதானத்தையும் ஏற்படுத்தும் .

    Reply : 0       0

    samrana Sunday, 10 July 2011 02:07 AM

    எத்தனையோ ஊடகவியலாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் போது ஏன் மப்ரூகிற்கு மட்டும் எக்காலமும் சிக்கல்

    Reply : 0       0

    Munas Sunday, 10 July 2011 11:50 PM

    samrana என்பவரே.... அம்பாறை மாட்ட ஊடகவியலாளர்களில் கணிசமானோர் கட்டிடங்களுக்கு கல் நடப்படுவதையும், அரசியல்வாதிகள் திறப்பு விழாக்களில் நாடா வெட்டுவதையும்தான் எழுதுகிறார்கள்.

    சிலர்தான் பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகக் குரல் கொடுக்கின்றார்கள்.

    மட்டுமன்றி, கணிசமான ஊடகவியலாளர்கள் தொடுவதற்கு அஞ்சுகின்ற விவகாரங்களை தனது எடுத்துக்களுக்குள் கொண்டு வருபவர் மப்றூக்!

    பத்திரிகைகளிலும் - தமிழ் மிரரிலும் அவர் எழுதிவரும் கட்டுரைகளை முதலில் வாசியுங்கள்! காய்க்கும் மரத்துக்கே கல்லடி விழும்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

7 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

7 hours ago - 0     - 6

மன்னிப்பு

7 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

7 hours ago - 0     - 5